Others
கோயில் யானை செங்கமலம், தேசியக்கொடிக்கு மரியாதை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை செங்கமலம், மவுத் ஆர்கன் வாசிப்பது போன்ற தனது தனித்துவமான செயல்பாடு காரணமாக மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த நிலையில், கோயிலில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. கோயில் அறங்காவல் குழு தலைவர் இளவரசன் தேசியக் கொடி ஏற்றினார். அப்போது, கோயில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.அப்போது, அங்கிருந்த கோயில் யானை செங்கமலத்திடம் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்த பாகன் அறிவுறுத்தினார்.இதையடுத்து, யானை செங்கமலம் தனது காலை மடித்து, தும்பிக்கையை உயர்த்தி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தியது. .