fbpx
Others

கொளத்தூர்-ரெட்டேரி சந்திப்பில்சோதனை சாவடி— மீண்டும் திறப்பு

: கொளத்தூர், ரெட்டேரி சந்திப்பில் அகற்றப்பட்ட சோதனை சாவடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள ராஜமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரெட்டேரி சந்திப்பில் புதிய சோதனை சாவடி திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த இடத்தில் இருந்த சோதனை சாவடி மேம்பாலம் கட்டும் பணிக்காக அகற்றப்பட்டு பல ஆண்டுகளாக சோதனை சாவடி இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், மீண்டும் இந்த சோதனை சாவடி திறக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியை இணை ஆணையர் ராஜேஸ்வரி திறந்து வைத்தார்.
கொளத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் ராஜாராம், உதவி ஆணையர்கள் சிவகுமார், ஆதி மூலம், ஆய்வாளர்கள் மூர்த்தி, லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ராஜமங்கலம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் இந்த சோதனை சாவடி திறக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள்’ என்று துணை ஆணையர் ராஜாராம் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close