fbpx
Others

“குண்டு வைக்கவும் ., துப்பாக்கிச் சுடவும் தெரியும்”சர்ச்சை பேச்சு

சர்ச்சையாக பேசிய முன்னாள் ராணுவ வீரர் பாண்டியன்

  • எங்களுக்கும் குண்டுவைக்கவும் தெரியும் துப்பாக்கிச் சுடத் தெரியும் என  சென்னையில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் பாண்டியன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் தொட்டி அருகே துணிதுவைத்தராணுவவீரர்உறவினருக்கும் திமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த நிலையில் ராணுவ வீரர் பிரபு மரணத்திற்கு நீதி கேட்டு பாஜகவினர் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.இந்த போராட்டத்தில் ராணுவ வீரர் கொலை பாஜக நிர்வாகி தடா பெரியசாமி இல்லம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற சம்பவங்களை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பேசிய தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.போராட்டத்தில் பேசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லெப்டினன்ட் கர்னல் பாண்டியன், இந்திய ராணுவம் உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவம். இந்திய ராணுவ வீரர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். அவர்களைச் சீண்டுவது சரியல்ல என்றும் ராணுவத்தில் பணிபுரிந்த பிரபு அவர்களை திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் படுகொலை செய்திருக்கிறார். நான் உன்னை என்ன செய்தாலும் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. எனக்கு என்னுடைய திமுக தலைவர்கள் ஆதரவாக இருப்பதால் நான் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நினைப்பில் செய்திருப்பதாக பாண்டியன் பேசினார்.

Related Articles

Back to top button
Close
Close