fbpx
Others

குடியிருப்போர் நல சங்கத்தினர் கிராம சபா கூட்டத்தில் கோரிக்கை . !!

புழல் ஒன்றியம் தீர்த்த கிரையம்பட்டு ஊராட்சி சப்த ஹஷ்மி நகரில் சாலை மற்றும் கால்வாய் அமைக்க வேண்டும்.   திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி சப்த ஹஸ்மி நகரில் சுமார் 25 வீடுகள் உள்ளன இப்பகுதியில் சாலை அமைக்கப்படாமல் சீர்கேடாக உள்ளது. மேலும் பல்வேறு பகுதியிலிருந்து மழை நீர் .கழிவு நீர் இப்பகுதியை வந்து சூழ்ந்து கொண்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கருவேல மரங்கள் சில இடங்களில் சூழ்ந்து புதர் போல காட்சியளிப்பதால் சமூக விரோத செயல்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.  எனவே இந்த பகுதியில் சீரான சாலை அமைக்கவும்  கால்வாய் வசதியை செய்து தரவும். உரிய அதிகாரிகள் மூலமாக கருவேல மரத்தை வேரோடு அப்புறப்படுத்தவும். சமீபத்தில் நடந்த கிராம சபா கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா டேவிட்சன் அவர்களிடம் கோரிக்கை மனுவை இப்பகுதி குடியிருப்போர் சங்கத்தினர் வழங்கினர் .
உரிய அதிகாரிகளிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி விரைவாக சாலை மற்றும் கால்வாய் பணிகளை செய்து தருவதாக ஊராட்சி மன்ற தலைவர் கவிதா டேவிட்சன் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close