Others
கீழவடகரைஊராட்சியில்விழிப்புணர்வு பிரச்சாரம்
நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல்ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரசு தடை
-தேனி மாவட்டம்..ஜூலை.04.பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழவடகரைஊராட்சியில் ,தூய்மை பாரத இயக்கம் சார்பில் நெகிழி இல்லா தமிழகம் நம்ம ஊராட்சிக்கு நெகிழியிலிருந்து விடுவு காலம் என்னும் தலைப்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
பிரச்சாரத்தில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு கூடாக சென்று நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் நெகிழியை தரம் பிரித்து கொடுப்பவருக்கு ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் வழங்கப்படும் என்று விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கினார்கள்.ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ்,துணைத் தலைவர் ராஜசேகர்,ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.