காந்தி நினைவாக எழுப்பப்பட்ட 10 முக்கிய அருங்காட்சியகங்கள்..!
அக்டோபர் 2, 1859 அன்று, போர்பந்தர் மாநிலத்தின் திவானான கரம்சந்த் உத்தம்சந்த் காந்திக்கும் அவரது மனைவி புத்லிபாய்க்கும் பிறந்தவர், தேசத்தில் தந்தையாய் மாறினார். அவரது நினைவிடங்களில் சில….
- News18 Tamil
- Thanks.
சபர்மதி ஆசிரமம்
1917 மற்றும் 1930 ஆம் ஆண்டு முதல் காந்தியின் இல்லமாக இருந்த சபர்மதி ஆசிரமம் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு காந்தியால் நிறுவப்பட்டது. விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் நெசவு போன்ற வாழ்க்கையை கடைபிடிக்க சபர்மதி ஆற்றின் கரையில் உள்ள இந்த இடத்தை அவர் தேர்ந்தெடுத்தார். மார்ச் 12, 1930 இல் இங்கிருந்துதான் தண்டி யாத்திரியைத் தொடங்கினார். சார்லஸ் கொரியாவால் வடிவமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் மூன்று காட்சியகங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும்.
மணி பவன்
1917 மற்றும் 1934 க்கு இடையில், காந்தி அடிக்கடி மும்பையின் காம்தேவி சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள மணி பவன் என்ற தனது நண்பர் ரேவசங்கர் ஜக்ஜீவன் ஜாவேரியின் வீட்டில் தங்குவார். ரவுலட் சட்டத்திற்கு எதிரான அவரது சத்தியாகிரகம் உட்பட காந்திய வரலாற்றில் பல முக்கிய அத்தியாயங்களுக்கு இந்த வீடு சாட்சியாக இருந்து வருகிறது. இந்த வீடு 1955 இல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்
வார்தா, மகாராஷ்டிரா
காந்தி சபர்மதி ஆசிரமத்தை விட்டு வெளியேறிய பிறகு, மும்பையில் இருந்து 600 கிமீ தொலைவில் உள்ள வார்தாவில் உள்ள மகன்வாடியில் குடியேறினார். 1938 ஆம் ஆண்டு காந்தி மகன் சங்க்ரஹாலயாவை நிறுவினார். கிராமப்புற தொழில்நுட்பத்தை கருப்பொருளாகக் கொண்ட ஓர் அருங்காட்சியகம், அவரின் அப்போதைய மறைந்த நண்பரும் கூட்டாளியுமான மகன் லால் காந்தியின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
அகா கான் மாளிகை:
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, மகாத்மா காந்தியும் அவரது மனைவி கஸ்தூரிபா காந்தியும் மற்ற தலைவர்களுடன் அகா கான் மாளிகையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இங்கு தனது இறுதி மூச்சை விட்ட கஸ்தூரிபா காந்தி, சார்லஸ் கொரியாவால் கட்டப்பட்ட நினைவுச்சின்னத்தின் மூலம் நினைவுகூரப்பட்டுள்ளது. காந்தியும் கஸ்தூர்பாவும் பயன்படுத்திய அறைகள் அவர்களின் தனிப்பட்ட உடைமைகள் மற்றும் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களைக் கொண்ட அருங்காட்சியக காட்சியகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
டெல்லியில் அமைந்துள்ள ராஜ்காட், மகாத்மா காந்தி தகனம் செய்யப்பட்ட இடத்தைக் குறிக்கும் நித்திய சுடர் கொண்ட கருப்பு மேடையைக் கொண்டுள்ளது. மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூர்பாவுடன் தொடர்புடைய அசல் கலைப்பொருட்கள், புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் ஆவணங்கள், புகைப்படங்கள், மற்றும் பிற நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றின் சேகரிப்புகளைக் கொண்ட தேசிய காந்தி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. திங்கட்கிழமைகள் தவிர அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும்.
மகாத்மா காந்தியைப் பற்றி அவரது புகைப்படங்கள் மற்றும் கடிதங்கள் மூலம் அறிய சிறந்த இடங்களில் ஒன்று கொல்கத்தாவில் இருந்து வடக்கே சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள பாரக்பூரில் உள்ள காந்தி ஸ்மிருதி சங்க்ரஹாலயா ஆகும். இந்த வாழ்க்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஐந்து காட்சியகங்கள் முழுவதும் காந்தி பயன்படுத்திய கலைப்பொருட்கள், சில அரிய கடிதங்கள் மற்றும் சிற்பங்கள் உட்பட ஒரு பெரிய புகைப்பட தொகுப்பு உள்ளன. புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்
தமுக்கம் அரண்மனை, மதுரை, தமிழ்நாடு
நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ராணி மங்கம்மாளுக்குச் சொந்தமான, புதுப்பிக்கப்பட்ட 17 ஆம் நூற்றாண்டில் தமுக்கம் அரண்மனையில் அமைந்துள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் அவரது படுகொலையின் பது அவர் அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த ஆடையின் ஒரு துண்டு வைக்கப்பட்டுள்ளது.
காந்தி சங்கரஹாலயா, பாட்னா, பீகார்
பாட்னாவில் உள்ள காந்தி சங்க்ரஹாலயா பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து, இப்போது ஒரு படத் தொகுப்பு, சிலைகள், நினைவுச் சின்னங்கள், நூலகம் மற்றும் காந்தி சாகித்ய கேந்திரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அருங்காட்சியகத்தின் நுழைவு இலவசம்.
காந்தி ஸ்மிருதி, புது தில்லி
டீஸ் ஜனவரி சாலையில் அமைந்துள்ள இந்த இடம் முன்பு பிர்லா ஹவுஸ் அல்லது பிர்லா பவன் என்று அழைக்கப்பட்டது. இது காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம். 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் தனது வாழ்க்கையின் கடைசி 144 நாட்களை இங்குதான் கழித்தார்.