fbpx
Others

காங்கிரஸ் — பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பிளவுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பு

, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின்பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பிளவுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பு - காங்கிரஸ் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை அடைந்துள்ளது. இந்த யாத்திரையின்போது ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். ராகுல்காந்தியின் இந்த யாத்திரை பயணத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பங்கேற்றார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது, நாட்டின் முன் 3 சவால்கள் உள்ளன. அதை எதிர்த்து நாம் போராட வேண்டியுள்ளது. பிரதமர் மோடியின் கொள்கைகள், நோக்கங்களால் இந்தியா பிளவுபடும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. பொருளாதார ஏற்ற-தாழ்வுகள் அதிகரித்துள்ளது. பிளவுபடுத்தும் சித்தாத்தங்கள் அதிகரித்துள்ளது’ என்றார்.

Related Articles

Back to top button
Close
Close