தமிழகத்தில் 7 மாவட்டங்களை வெளுக்க போகுதாம் மழை…! வானிலை மையம் தகவல்!
Chennai weather centre announcement
சென்னை:
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தாலும் பல மாவட்டங்களில் வெயில் குறையவில்லைது. இந் நிலையில் தென்மேற்கு பருவக்காற்றால் நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் கூறி இருப்பதாவது:
சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை. ஜூன் 23 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் 23ம் தேதி வரை மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.