கர்நாடகாவில் டி.கே.சிவகுமார் முதல்வர் —காங்கிரஸ் மேலிடம் ஆதரவு….
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவகுமார், ஜி.பரமேஷ்வர் ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவியது. அதில் சித்தராமையா, டிகேஎஸ் இருவருக்குமே சாதிய பின்புலமும், எம்எல்ஏக்கள் பலமும் சற்று கூடுதலாக இருந்தது. இதனால், இருவரில் யார் என்று டெல்லி மேலிடம் கொஞ்சம் கலங்கித்தான் போனது.நீண்ட இழுபறிக்கு பின்னர் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும், டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. அப்போது அந்த சுமுக முடிவை எட்டுவதற்கு கைமாறாக இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்க காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அப்படியொரு ஒப்பந்தம் இருந்தது தனக்குத் தெரியாது என்று சித்தராமையா அண்மையில் டெல்லி மேலிடத்திடம் சொல்லியதாகத் தகவல். ஒருவழியாக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றனர். ஆனாலும் கூட அமைதி ஒப்பந்தம் காகிதத்தில் இருந்ததே தவிர ஆதரவாளர்களுக்குள் இல்லை என்றே சொல்லலாம். முதல்வர் பதவியில் பங்கிருக்கிறது என்பதை சித்தராமையா தரப்பு மறந்துவிடக் கூடாது என்பதில் டிகேஎஸ் ஆதரவாளர்கள்
உறுதியாகஇருந்தனர்.அவ்வப்போதுஅதிரடிபேட்டிகள்,கருத்துகள்எனஎதையாவதுச்சொல்லிஅதைஉயிர்ப்புடன்வைத்திருந்தார்கள்.அந்தவகையில் பங்கு வைக்கப்பட்ட முதல்வர் பதவி 2.5 ஆண்டுகள் என்றகாலக்கெடுநெருங்கியதுமேடிகேஎஸ்தரப்பிலிருந்துமுட்டல்,முனகல்களும்வேகமெடுத்தன.அதன்உச்சமாககடந்தடிசம்பர்மாதம்டிகேசிவகுமார்முதல்வராகவேண்டும்என்றுபகிரங்கமாகவே அவரது ஆதரவாளர்கள் பேச ஆரம்பித்தனர். டிகேசிவகுமார்டெல்லிக்கும் சென்றுவந்ததால் அந்தப் பேச்சு இன்னும் வலுவானது.தொடர்ந்து, டெல்லி மேலிடமும் சமரச முயற்சிகளை மேற்கொண்டது. சித்தராமையா – டிகே சிவகுமார் மாறிமாறி ஒருவரது வீட்டில் இன்னொருவர் காலை உணவை அருந்தினர். “நாங்கள் ஒற்றுமையோடு இருக்கிறோம்” என்று கூட்டாக தெரிவித்தனர் ஆனால், “எதுவாகஇருந்தாலும்டெல்லிமேலிடமேமுடிவுசெய்யும்”என்றுசிவகுமார்தனியாகவும்,“நான்5ஆண்டுகள்முதல்வராகஇருப்பேன்”என்றுசித்தராமையாதனியாகவும்பேட்டிக்கொடுத்துநாற்காலிச்சண்டைஇன்னும்முழுவதமாகமுடிந்துவிடவில்லை என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தனர்.இந்த நிலையில்தான், டெல்லியில் மே 26 அன்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முதல்வர் மாற்ற விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கர்நாடகாவில் முதல்வரை மாற்றுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு மேலிடத் தலைவர்கள், சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு கூறியுள்ளனர். மேலும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, தேசிய அரசியலில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியதாகவும் தகவல். அதேபோல், கர்நாடக சட்ட மேலவை உறுப்பினராக உள்ள அவரது மகன் யதீந்திரா அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்றும் சமரச திட்டம் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், மே 28 காலையில் பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் அதிகாரப்பூர்வ இல்லாமான காவரியில் டிகே சிவகுமார் உணவருந்தினார். ‘பிரேக்ஃபாஸ்ட் டீல்’ ஆக முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா கூறியதாகவும், அதனையடுத்து அவர் காலில் விழுந்து டிகேஎஸ் ஆசிர்வாதம்வாங்கிய புகைப்படங்கள் வெளியாகி தொடர்ந்து ராஜினாமா நடக்கும் என்பதை உறுதி செய்தன.அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் இல்லாததால் அவரது செயலரிடம் கொடுத்துத் திரும்பிய சித்தராமையா “மேலிடம் கேட்டுக் கொண்டதால்
ராஜினாமா செய்கிறேன். எனது வாக்கைகாப்பாற்றிவிட்டேன்” என்று கூறிச்சென்றார்.கூடவே, ‘மாநில அரசியலில் எப்பவும் போல் சுறுசுறுப்பாக இயங்குவேன். தேசிய அரசியலில் நாட்டமில்லை’ என்றும் கூறியுள்ளார்.ஓர் உறைக்குள் இரண்டு கத்தியை பொருத்த முடியாத காங்கிரஸ் மேலிடம் கர்நாடகா சிவகுமாருக்கும், டெல்லி சித்தராமையாவுக்கும் என்று முற்றுப்புள்ளி வைக்க நினைத்த நிலையில், அருகிலேயே ஒரு சிறுபுள்ளிகளைவைத்து,இதுஇன்னொருசர்ச்சையின்ஆரம்பமோஎன்றஅச்சத்தைடெல்லிக்குகடத்தியிருக்கிறார்.சித்தராமையா காங்கிரஸ் தலைவர்களில் மிக முக்கியமான ஓபிசி முகம் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவின் நீண்டகால முதல்வர் என்ற பெருமையை சித்தராமையாகடந்தஜனவரியில்பெற்றார்.அதற்குமுன்னதாகஅந்தப்பெருமைடி.தேவராஜுஉர்ஸ்வசம்இருந்தது.சித்தராமையாகுருபாஎன்றவிவசாயசமூகத்தில்பிறந்தவர்.சட்டம்பயின்றஇவர்,1983கர்நாடகசட்டப்பேரவைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். முன்னதாக ஜனதாதளத்தில் இருந்தார். ஹெச்டி தேவகவுடாவுடனான முரணுக்குப் பின்னர்2006காங்கிரஸில்இணைந்தார்.அவரதுவருகைகர்நாடககாங்கிரஸுக்கும்,அரசியலில்அவரதுபாய்ச்சலுக்கும்வித்திட்டது.சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தலித் நலன் சார்ந்த அரசியல் தான் சித்தராமையாவின் பலம். கன்னடத்தில் இதை AHINDA அரசியல் என்று சொல்வார்கள்.அவரதுஅந்தஅரசியல்வியூகம்தான்2023ல்மீண்டும்காங்கிரஸுக்குஅரியணையைத்தந்ததும்என்றும்கூறப்படுகிறது. கர்நாடக தேர்தல் முடிவை வொக்கலிகா, லிங்காயத் வாக்குகள்தான்முடிவுசெய்யும்என்பதைமாற்றிசிறுபான்மையினர்,பிற்படுத்தப்பட்டோர்,தலித்நலன்சார்ந்தஅரசியலைகையிலெடுத்து வெற்றியும் கண்டவர்.வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு மாதம்தோறும் ரேஷனில் 30 கிலோ அரசி வழங்கும் அன்ன பாக்யா திட்டம், அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கும் ஷீர பாக்யா திட்டம் அவருக்கு மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுத்தந்துள்ளது. நலத்திட்டங்களே அவர் கட்டியெழுப்பிய அரசியல்.அந்த வகையில், கர்நாடக அரசியலில் சித்தராமையின் ஆதிக்கமும், கவனமும் இருப்பது காங்கிரஸ் மேலிடத்துக்கு அவசியம். அதேவேளையில் 2029 மக்களவை தேர்தலில் தேசிய அரசியலில் சித்தராமையா சுற்றிச் சுழல வேண்டும் என்றும் மேலிடம் விரும்புவதாக தகவல்.சித்தராமையா இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் பதவியை கைமாற்றிவிட வேண்டிய நிர்பந்தம் வந்தபோது, தலித் எம்எல்ஏவான பரமேஸ்வராவைமுதல்வராக்கவிரும்பினார்என்றும்சொல்லப்படுகிறது.இந்தச்சூழலில்மீண்டும்சித்தராமையாடெல்லிக்குச்சென்றுமேலிடத்தலைவர்களைதனித்தனியாகசந்திக்கவிருப்பதாகத்தகவல்கள் வெளியாகின்றன. டி.கே.சிவகுமார் கர்நாடக காங்கிரஸின் வொக்கலிகா சமூகத்தின் முகம். இவர் கனகபுரா தொகுதியில் தொடர்ந்து பலமுறை வெற்றி பெற்றவர்.
‘கனகபுரா பாறை’ என்ற புனைப்பெயரும் உண்டு. அரசியலில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான் இவருடைய அணுகுமுறை.டி.கே.சிவகுமார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, 1979 ஆம் ஆண்டு இந்திய தேசிய மாணவர் சங்கத்தில் (NSUI) இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். படிப்படியாக உயர்ந்த அவர் 1981-ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.முதன்முதலில் 1985-ல் காங்கிரஸ் வேட்பாளராக சாந்தனூரில் களமிறங்கினார். தன்னுடைய நிலத்தை அடகு வைத்து தேர்தல் செலவுகளைச் செய்தார். ஆனால் அந்த தேர்தலில் தேவகவுடாவிடம் தோற்றுவிட்டார். இருந்தாலும் அவர் ஓயவில்லை. 1989, 1994, 1999 என அடுத்தடுத்து 3 முறை அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2008, 2013, 2018 மற்றும் 2023 சட்டப்பேரவை தேர்தல்களில் கனகபுரா தொகுதியில் தொடர் வெற்றி பெற்றுள்ளார்.காங்கிரஸ் மேலிடம் டி.கே.சிவகுமாரை ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த அரசியல்வாதியாகவே பார்க்கிறது. பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவருடைய உத்திகள் டெல்லி மேலிடத்துக்கு பிடித்தமானவை என்று கூறப்படுகிறது. 2018-ல் கர்நாடகாவில்காங்கிரஸ்மதச்சார்பற்றஜனதாதளம்கூட்டணிஆட்சியினைஒருங்கிணைத்தவர்முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தான் அவருடைய அரசியல் குரு. இறை நம்பிக்கை சற்றுதூக்கலாகவேகொண்டவர்.மாநிலஉரிமைகள்விஷயத்தில்கெடுபிடிகாட்டக்கூடியவர்.இத்தகைய சூழலில் கர்நாடக முதல்வர் பொறுப்பை டி.கே.சிவகுமார் எடுப்பார் என்றால் அவருக்கு சிறுபான்மையினர் நம்பிக்கையை வென்றெடுப்பது ஒரு பெரிய சவாலாக அமையும் என்று கணிக்கப்படுகிறது.அதுதவிர அடுத்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்குள் கர்நாடகாவின்லிங்காயத், வொக்கலிகா சமூகத்தினர் ஆதரவை பாஜக பக்கமிருந்து காங்கிரஸுக்கு மடைமாற்றவும் வேண்டியிருக்கும். அதேபோல் நாற்காலிக்கு எஞ்சிய காலத்தில் பிரச்சினை வராமலிருக்க சித்தராமையின் ஆதரவாளர்களின்
நன்நம்பிக்கையையும் பெற வேண்டும்காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்காக புதிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கைவிரைவில்மத்தியஅரசிடம்சமர்ப்பிக்கப்படும் என்று சமீபத்தில் டி.கே.சிவகுமார் முழங்கினார்.இது முதன்முறை அல்ல. மேகேதாட்டு விவகாரத்தில் டி.கே.சிவகுமார் எப்போதுமே உறுதியாகத் தான் இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள தவெகவுக்கு கர்நாடகத்தில் முதல்வர் மாற்றம் ஏற்படுவது முக்கியமாக கவனிக்கத்தக்கது.