கரிகாலன் நகர் பொது நலச் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா.. !
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள கரிகாலன் நகர் பொது நலச் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சங்கத் தலைவர். ரமேஷ் போஸ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சங்கர் மாயா அனைவரையும்வரவேற்றார். செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர்டாக்டர். கே.எஸ். பாலகிருஷ்ணன், செங்குன்றம் காவல் உதவி ஆணையர் ஆர்.ராஜா ராபர்ட், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் விவேகானந்தன், செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.செபத்தியான், சௌக்கத் அலீ, ஜி.பாரிசெல்வம், கண்ணப்பன், சரவணன், குமார், சங்கத் துணைத்தலைவர் மகேஷ்குமார், துணைச் செயலாளர் அப்பாவு, சுரேஷ் போஸ் ஆகியோர் முன்னிலைவகித்தனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு கோலப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, உறியடித்தல், ஓட்டப் பந்தயம், நடனப் போட்டி மீயூசிக்கல் பால் – சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.எலைட் மெட்ரிக் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அப்சல் கானுக்கு மாயா குடும்பத்தினர் சார்பில் பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.பிளாக் ஸ்குவாட் இளைஞர் குழு நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.