fbpx
Others

கம்பம் வடக்கு-கேரளமாநிலத்திற்கு கஞ்சாகடத்திய கணேசன்கைது.

தேனி  கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கேரள மாநிலத்திற்கு கஞ்சா கடத்தி செல்வதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லாவண்யா (பொறுப்பு) தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் கம்பம்மெட்டு மலைப்பாதை 3-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் சாக்குபையுடன் சந்தேகப்படும்படி வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சாக்குபையில் 8 கிலோ கஞ்சா கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சின்னக்கட்டளையை சேர்ந்த கணேசன் (வயது 46) என்பதும்,கேரளாவுக்குகஞ்சாவைவிற்பனைக்காககடத்திசெல்வதுதெரியவந்தது.  இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Articles

Back to top button
Close
Close