கம்பம்–காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
மணிப்பூரில் நடைபெற்ற கலவரம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து – கம்பம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!
ஜூலை_26 தேனி மாவட்டம் கம்பம் வ.உ.சி.திடல் காந்தி சிலை முன்பாக கம்பம் நகர காங்கிரஸ் தலைவர் K.C.போஸ் தலைமையிலும் சிறுபான்மைத்துறை மாவட்ட தலைவர் A.M.ராஜா முகமது அவர்கள் முன்னிலையிலும் மணிப்பூரில் நடைபெற்ற கலவரம் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் உள்ளிட்டவை கண்டித்து மெழுகுவத்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரதன் அவர்கள் கண்டன உரையாற்றினார் .இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் மணிப்பூர் மாநில அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர் மணிப்பூர் முதலமைச்சர் உடனடியாக பதவி விலக்கோரியும் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உத்தமபாளையம் வட்டாரத் தலைவர் சத்தியமூர்த்தி கூடலூர் நகர தலைவர் ஜெயபிரகாஷ், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத் தலைவர் முகமது இர்ஃபான், I.சர்புதீன் மனோகரன், MPM.பதுருதீன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரின்ஸ், சின்னமனூர் நகர தலைவர் பழனிமுத்து, வட்டாரத் தலைவர் ஜீவா, நைனார், புதுப்பட்டி ரவிச்சந்திரன், வேலுச்சாமி, ஜோசப் மனோகரன், சுரேந்திரன் சலேத்து, தர்மர், முத்து கண்ணு, இமானுவேல் நாகராஜ், M.S.கணேசன், சிங்கராஜ், சாட்டை சாதிக், மாயி, மாஸ்டர் மணி, முபின் ஆகியோர் கலந்து கொண்டனர்.