கமல்ஹாசன்—நான் ஏன் எம்.பி., ஆக கூடாது…..? சூப்பர்….!
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்இளங்கோவன்போட்டியிடுகிறார்.முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் தோழமைக் கட்சிகளை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி இருந்தார். அதுபோலவே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தார். நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவை அறிவிப்பதாக கமல்ஹாசன் கூறியிருந்தார்.இதுகுறித்து இன்று காலை 11.30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக ராகுல்காந்தியின் தேசிய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன், ராகுல்காந்தியுடன் உரையாடலும் நிகழ்த்தி இருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், கமல்ஹாசனின் இன்றைய ஆலோசனைக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். காங்கிரஸ் வெற்றிக்கு தானும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும் வேண்டிய உதவிகளை செய்வோம் என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலத்தையும் நியமித்தார்.அப்போது எம்.பி ஆவதற்காகதான் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறீர்களா என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நான் ஏன் எம்பி ஆக கூடாது. கமல்ஹாசன் முதலமைச்சர் ஆக வேண்டும் என சொன்னதுக்கு கோபிக்காத நீங்கள் ‘மெம்பர் ஆஃப் பார்லிமெண்டு’ என சொல்லும்போது ஏன் கிண்டல் செய்கிறீர்கள்..” என கூறினார். மேலும் அப்படி இருக்கலாம் எனவும் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசையை சூசகமாக தெரிவித்துள்ளாரா…? கமல்ஹாசன் என்ற கேள்வி எழுந்துள்ளது.