Others
கப்பலுடையான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிதிறப்பு…
பழுது நீக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழா
நீடாமங்கலம் வட்டாரம் கப்பலுடையான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டிடம் பழுது நீக்கப்பட்டு மாணவர் பயன்பாடுகளுக்காக திறந்து வைக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்பா .உமையாள் தலைமை ஏற்றார். நிகழ்ச்சியில் எஸ் எம் சி தலைவர் அகிலா எஸ் எம் சி உறுப்பினர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆசிரியர் வீரசிங்கம் வரவேற்றார் ஆசிரியர்கள் சைலஜா, சித்ரா, ஞானசேகரன், கலைச்செல்வி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் சுசித்ரா, விந்தியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். எஸ் எம் சி துணை தலைவர் விஜயா நன்றி உரையாற்றினார் விழாவில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..