செமஸ்டர் தேர்வை நடத்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை..!
Anna university discussion to conduct semester examination
சென்னை:
வீடுகளில் இருந்தே ஆன்லைன் தேர்வை எழுத வைப்பது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது.
கொரோனா காரணமாக 10ம் வகுப்பு தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்ய யுஜிசி பரிந்துரை செய்துள்ளது.
இந் நிலையில் பொறியியல் கல்லூரிகளில் 3ம் ஆண்டு வரை மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. கொரோனோ தாக்கம் குறைந்த பிறகு அரசு ஒப்புதலோடு தேர்வுகள் நடத்தலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு வேலைவாய்ப்புக்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட உள்ளதால் இறுதியாண்டு மாணவர்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த அண்ணா பல்கலைகழக யோசனை செய்து வருகிறது.