fbpx
Others

கடலூர் மாவட்டம்– பரங்கிப்பேட்டையில்கண்டன ஆர்ப்பாட்டம்.

77.நாட்களாகமணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கிய மணிப்பூர் மாநில அரசை வெளியேறச் சொல்லியும் கள்ள மவுனம் காக்கின்ற ஒன்றிய அரசை கண்டித்தும்அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இன்று காலை 27.7.2023 10 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் தோழர் எஸ் ஜி ரமேஷ்பாபு சிறப்புரையாற்றினார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளர் முனைவர் உசேன் பேரூராட்சி தலைவர் தேன்மொழி சங்கர் பேரூராட்சி துணைத் தலைவர் முகமது யூனுஸ் மற்றும் விசிக காங்கிரஸ் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் ஜனநாயக அமைப்புகள் B முட்லூர் ஜமாத் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்கள் கலந்துகொண்டு கண்டனம் முழக்கமிட்டனர் இறுதியாக சிறுபான்மை நலக்குழு மாவட்டத் துணைத் தலைவர் தோழர் அசன் முகமது நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close