கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
புவனகிரி பிப்ரவரி 16-
கடலூர் கிழக்கு மாவட்ட கழக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்என்.முருகுமாறன்,முன்னாள்அமைச்சர்செல்விஇராமஜெயம்,கழகஅம்மாபேரவை துணைசெயலாளர்கே.எஸ்.கே.பாலமுருகன், மாவட்ட கழக பொருளாளர் தோப்பு.கே.சுந்தர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் க.திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னைவர் கானூர்.கோ.பாலசுந்தரம் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில்…மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு வருகின்ற 24 ஆம் தேதி கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்தின் ஒன்றிய, நகர பேரூர் கழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அம்மா அவர்களின் திரு உருவ சிலைகளுக்கும், திரு உருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கியும் அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும். நடைப்பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது…
தீர்மானம் : 1 நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76வது பிறந்த நாள் விழாவை வருகின்ற 24.02.2024 சனிக்கிழமை அன்று கடலூர் கிழக்கு மாவட்டம்.