fbpx
Others

கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர் கைது..!! திருப்பூர்

திருப்பூர் ரெயில் நிலையத்தில் 6 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர் கைது  திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை , போலீசார் அசோக்குமார் , கோபால் ஆகியோர் நேற்று காலை 7. 40 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர் . அப்போது தன்பாத்தில் இருந்து கேரள மாநி லம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரெயில் 1 – வது நடைமேடையில் வந்து நின்றது . ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபர் ஒருவர் , ரெயில் நிலையத்தில் மின்தூக்கி அருகே பையுடன் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தார் . உடனடியாக அவரிடம் விசா ரணை நடத்திய போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர் . அந்த பைக்குள் 7 பொட்டலங்களில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது . வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி திருப்பூரில் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளார் . விசாரணையில் அவர் , ஒடிசா மாநிலம் பாலங்கிர் பகுதியை சேர்ந்த ஆனந்த்குமார் சாகு ( வயது 34 ) என்பது தெரியவந்தது . இதைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த் குமார் சாகுவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் .

Related Articles

Back to top button
Close
Close