fbpx
Others

ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்துஅஇஅதிமுககூட்டம்

போடி -மீனாட்சிபுரம் அருகே, ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து அஇஅதிமுகவினர் கூட்டம்: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே, பொட்டல்களம்- செல்லாயம்மன் கோவிலில், மீனாட்சிபுரம் பேரூர் கழக அதிமுகவினர் சார்பில், ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகவும், எடப்பாடி. பழனிச்சாமியை கண்டித்தும், கண்டன கூட்டம், போடி- மீனாட்சிபுரம் (அஇஅதிமுக) பேரூராட்சித் தலைவர் திருப்பதி தலைமையில், நடைபெற்றது. இக்கூட்டத்தில், சேர்மன் எஸ்.திருப்பதி பேசுகையில், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பேசி, ஓர் சுமூகமான முடிவை எட்டிட வேண்டும்; கழகத்தை ஒற்றுமையாக கட்டிக் காப்பாற்றிட வேண்டும்; இருவரும் ஒன்றிணைந்து கழகத்திற்காக பாடுபட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி பேசினார்.இதில், அஇஅதிமுக கட்சியினர் உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close