ஒரு பெரிய காந்த வெடிப்பு நிகழும்போது – சூரிய புயல் நிகழ்கிறது.
-
சூரியப் புயல் ஏப்ரல் 24-ஆம் தேதி பூமியைத் தாக்கும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி இன்னும் வலுவான வெப்பம் ஏற்படும் என்று நாசா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன்போது, மக்கள் கூடுமானவரை வெளியில் செல்லவேண்டாம் என்றும், அதிகளவு தண்ணீர் குடித்து உடலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளுமாறும்அறிவுறுத்தியுள்ளது. . சூரியனால் வெளியிடப்படும் வெப்பமான காற்று மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. வெளியாகும் கதிர்வீச்சு ரேடியோ தகவல்தொடர்புகளில் தலையிடக்கூடும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.ஒரு பெரிய காந்த வெடிப்பு நிகழும்போது இது நிகழ்கிறது. இந்த புயல்கள் இணையம் முதல் ஆற்றல் வரை ஒவ்வொரு மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைப்பையும் பாதிக்கின்றன. மேலும் செயற்கைக்கோள்களை அழிக்கும் ஆற்றலும் இவற்றிடம் உண்டு.2025 ஆம் ஆண்டில் சூரிய சக்தியின் அதிகபட்ச அளவை நெருங்கும் போது சூரிய நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரிக்கும். மேலும் இது பூமியில் உள்ள நமது வாழ்க்கை மற்றும் தொழில்நுட்பத்தையும், விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி வீரர்களையும் பாதிக்கும் என்று நாசா எச்சரித்ததுள்ளது.