fbpx
Others

ஒன்றிய அரசு–75% பேர்உயர்நீதிமன்ற நீதிபதிகளில்உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள்.

 நாட்டில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 75 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் நியமனத்தின்போது தாழ்த்தப்பட்டோர்,பழங்குடிகள்,பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் 650 பேரில் 492 பேர் (75.69%) உயர்ஜாதியினராவர். மாநிலங்களவையில் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த பதிலில் தகவல் வெளியாகியுள்ளது.ஐகோர்ட்: ஆண்டு வாரியாக நீதிபதிகள் நியமன விவரம்:2018-ல் உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட 108 நீதிபதிகளில் 82 பேர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2018-ல் நியமிக்கப்பட்ட 108 நீதிபதிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் 2 பேர்; பழங்குடியினர் 2 பேர்; பிற்படுத்தப்பட்ட ஜாதியினர்

 11 பேர், சிறுபான்மையினர் 11 பேர் 2018-ல் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கப்பட்டு உள்ளனர்; 11 பேர் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.2019-ல் உயர்சாதிகளைச் சேர்ந்த 64 பேர் நீதிபதிகளாக நியமனம் :2019-ல் நியமிக்கப்பட்ட ஐகோர்ட் நீதிபதிகள் 81 பேரில் 64 பேர் உயர்ஜாதிகளையும் 8 பேர் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளையும் சேர்ந்தவர்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3 பேரும் பழங்குடி பிரிவைச் சேர்ந்த ஒருவரும் சிறுபான்மையினர் 3 பேரும் 2019-ல் நியமிக்கப்பட்டுள்ளனர்  .2020-ல் உயர்சாதிகளைச் சேர்ந்த 52 பேர் நீதிபதிகளாக நியமனம்:2020-ல் ஐகோர்ட்டுகளுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகள் 66 பேரில் 52 பேர் உயர்ஜாதிகளையும் 11 பேர் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளையும் சேர்ந்தவர்கள். 2020-ல் பழங்குடி பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூட உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. :2020-ல் உயர்சாதிகளைச் சேர்ந்த 85 பேர் நீதிபதிகளாக நியமனம் : 2021ல் உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட 120 நீதிபதிகளில் 85 பேர் உயர் ஜாதிகளை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close