fbpx
Others

ஒன்றிய அமைச்சர்–ஆவடி சிஆர்பிஎப் மையத்தில் பல்வேறு பதவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்..

ஆவடி சி.ஆர்.பி.எப். மையத்தில் ரோஜ்கர் மேளாவில் கலந்துகொண்டு பல்வேறு பதவிகளுக்காக பணி நியமன ஆணையை ஒன்றிய அமைச்சர் நாராயணசுவாமி வழங்கினார். நாடு முழுவதும் உள்ள 47 இடங்களில் ரோஜ்கர் மேளா நேற்று நடந்தது. இதில், ஆவடி சிஆர்பிஎப் மையத்த்தில் நடந்த ரோஜ்கர் மேளா 12வது தவணை வேலைவாய்ப்புத் திருவிழாவில் ஒன்றிய அரசின் வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், உயர்கல்வித் துறை, அணுசக்தித் துறை, பாதுகாப்புத் துறை, நிதிச் சேவைத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பழங்குடியினர் நல அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் உள்ளிட்டவற்றில் இருக்கக்கூடிய பல்வேறு பதவிகளுக்கு, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகளில் சேர உள்ளனர்.    இவர்களுக்கு பணி நியமன ஆணைகள்பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அந்த வகையில் ஆவடி சிஆர்பிஎப் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் நாராயணசுவாமி கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில், சிஆர்பிஎப் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close