fbpx
Others

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்– அரசு உத்தரவு

 சென்னை, தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை வடக்கு சட்டம் – ஒழுங்கு துணை ஆணையராக இருந்த மாதவன், சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சைபர் கிரைம் கண்காணிப்பாளராக இருந்த அசோக்குமார், கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதிவாணன்- கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புக்யா சினேகா பிரியா – மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஸ்கரன் – தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6வது பட்டாலியன் கமாண்டண்ட் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரேயா குப்தா – விளாத்திகுளம் உதவி எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close