fbpx
Others

ஏர் ஹாரன்களை– நொறுக்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்.

தமிழ்நாடு அரசு கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் போக்குவரத்து விதீ மீறல்களுக்கு 10 மடங்கு அபராதம் விதிக்கும் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது.

அதன்படி தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.100க்கு பதில் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படுகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி 2-வது முறை சிக்கினால் ரூ.15,000 அபராதம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. இன்சூரன்ஸ், லைசென்சு இல்லையென்றால் ரூ.500-க்கு பதில் ரூ.5,000 அபராதம்,  கார், கனரக வாகனங்கள்,இருசக்கர வாகனங்களை அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாக ஓட்டினால் ரூ. 1,000 முதல் ரூ. 4,000 வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. பேருந்துகளில் ஏர்ஹாரன் குறித்து தஞ்சை மாநகரில் ராமநாதன் ரவுண்டானா, அண்ணாசிலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படுள்ளன.இந்த நிலையில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது போக்குவரத்து விதிமீறலுக்கு உள்பட்டதாகும். இந்த வகை பேருந்துகள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் செல்லும் பகுதிகளில் அதிக ஒலி எழுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.இதனால் பொதுமக்கள் அதிக இரைச்சலின் காரணமாக சிரமத்துக்குள்ளாகின்றனர்.சில சமயங்களில் திடீரென எழுப்பப்படும் இது போன்ற அதிக ஒலியினால் சாலையில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர்.இதனை தடுக்கும் விதமாக நேற்று தஞ்சை மணிமண்டபம் அருகேபோக்குவரத்து ஒழுங்குப்பிரிவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனியார், அரசு பேருந்துகளை நிறுத்தி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். ஏர்ஹாரன் பொருத்தப்பட்டிருந்த பேருந்துகளை அதன் டிரைவர் மூலம் அகற்றினர். பின்னர் அதனை டிரைவர் கையால் பேருந்து டயருக்கு கீழே வைக்க சொல்லி, பேருந்தை இயக்க வைத்து உடைத்தனர்.மேலும், இது போன்று இனி ஏர் ஆரன்கள் பொருத்தப்பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பினர். இந்த சோதனையின் மூலம் 4 தனியார் பேருந்துகள், 1 அரசு பேருந்தில் இருந்த ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டு உடைக்கப்பட்டது.அதுமட்டுமின்றி நேற்று முதல் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு எச்சரிக்கை கிடையாது கண்டிப்பாக அபராதம் வசூலிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்..

டிரைவர்கள் கைகளாலே ஏர் ஹாரன்களை கழற்றி டயரில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்.

 

Related Articles

Back to top button
Close
Close