எதிர்க்கட்சி எம்பிக்கள்–ஆளுநர்கள் நியமனத்தில் மாற்றம் வேண்டும்.
* மனோஜ் குமார் ஜா(ஆர்ஜேடி): பாஜ எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில், எதிர்க்கட்சிகளின் 60 சதவீத பணிகளை ஆளுநர் செய்கிறார்.* ஜான் பிரிட்டாஸ் (மார்க்சிஸ்ட்): மாநில அரசுகளை சீர்குலைக்கவும், அவதூறு செய்யவும் கவர்னர்கள் ஒன்றிய அரசின் கைகளில் கருவிகளாக மாறியுள்ளனர். * சந்தோஷ் குமார்(இந்திய கம்யூனிஸ்ட்): எங்கள் கட்சி ஆளுநர் பதவிக்கு எதிரானது. அந்த பதவியை ரத்து செய்ய விரும்புவதால், மசோதாவை ஆதரிக்க முடியாது. ஆளுநர்கள் அரசியல் சூழ்ச்சியாளர்களாக மாறிவிட்டனர். * வில்சன் (திமுக): கவர்னர்கள் பதவி என்பதும் பொறுப்பு மட்டும் தான் என்பதால் சட்டசபை சபாநாயகருக்கு கவர்னரின் அதிகாரம் வழங்கப்படலாம். * ஆர்.கிரிராஜன்(திமுக): தமிழ்நாட்டில் ஆளுநர் செய்யும் மோதல்களால் பிரச்னை உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும். * சண்முகம் (திமுக): மாநில அரசுடன் கலந்தாலோசித்த பிறகே கவர்னர் நியமிக்கப்பட வேண்டும். மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபற்றி முடிவு எடுக்கப்பட வேண்டும்.* அஜய்குமார் சிங்(பா.ஜ): அரசியலமைப்பின் 356 வது பிரிவை அதிகபட்சமாக காங்கிரஸ் 51 முறை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.