fbpx
Others

எதற்கும் உதவாத முதல்வரின் முகவரி துறை…..?

 எதற்கும் உதவாத முதல்வரின் முகவரி துறை இணையத்தளம். cmhelpline website அல்லது cmhelpline ஆண்ட்ராய்டு ஆப் மூலம் பதியப்படும் எந்த புகார்களுக்கும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை.எந்த புகார் அளித்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும் என Accepted நிலையில் புகார் மூடப்படுகிறது. நடவடிக்கை எடுக்காமல் புகாரை ஏன் மூட வேண்டும்? வருவாய்த்துறை, பஞ்சாயத்து ராஜ், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை என அனைத்து துறைகளும் இதே போன்று தான் பொறுப்பில்லாமல் செயல்படுகிறது. முதல்வரின் முகவரி துறை என்ற இணையத்தளம் எதற்காக செயல்படுகிறது? முதல்வரின் முகவரி துறைக்கு ஒதுக்கப்பட்ட IAS அதிகாரி இதுவரை என்ன சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளார்? சும்மா புகார்களை பெற்றுக்கொண்டு, மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு துறையா?  உங்கள் புகார்களுக்கும் cmhelpline மூலம் தீர்வு காணப்படவில்லை என்றால், கீழ்கண்ட வாட்சப் குழுவில் இணையவும். உங்கள் குறைகளை குழுவில் கூறலாம் மற்றும் முதல்வரின் முகவரி துறைக்கு ஒதுக்கப்பட்ட IAS அதிகாரியை தலைமை செயலகத்தில் நேரில் சென்று சந்திக்கலாம். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

Related Articles

Back to top button
Close
Close