உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள்செயற்குழு
விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்ற உதய நிதி ஸ்டாலினுக்கு உலக சிலம்ப ஆசான்கள் சங்கம் வாழ்த்து! உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை அசோக் நகர் என். ஆர். டி. டவர் தரைதளத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் என் .ஆர். தனபாலன் தலைமை தாங்கினார் .துணை தலைவர்கள்
பவர். பாண்டியன் நாராயணன் . முரளி சோழாஞானம். முன்னிலை வகித்தனர். சங்கத்தின் செயலாளர் ஆர். முருகக்கனி அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.மேலும் சிலம்ப விளையாட்டு வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்.மூத்த ஆசான்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும்.அரசு பள்ளி. தனியார் பள்ளி .என அனைத்து பள்ளிகளிலும் சிலம்பாட்டத்தை கட்டாய பயிற்சி பாடமாக ஆக்க வேண்டும்.முதல்வர் கோப்பை விளையாட்டில் சிலம்பத்தை சேர்த்து அனைத்து மாவட்டங்களிலும் போட்டி நடத்தி இறுதிப்போட்டியை மாநில அளவில் சென்னையில் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கோல்டன் கோபால் .குமார். ஸ்ரீதர். துரை அரசன்.சாமி. ரவி .வில்சன். விஜயன். விக்னேஷ் வசந்த் .ஜெயபால். சவுந்தரராஜன். உள்பட பல ஆசான்கள் ஆசிரியர்கள் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் சங்க பொருளாளர். ராஜவேலு நன்றி கூறினார்.