உலக சிலம்ப ஆசான்கள்/ஆசிரியர்கள் கூட்டம்
உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை அசோக் நகர் என். ஆர். டி. டவர் தரைத்தளத்தில் சங்கத்தின் தலைவர் என். ஆர். தனபாலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பவர் எஸ்.பாண்டியன் ஆசான் முன்னிலை வகித்தார்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். முருகக்கனி ஆசான் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் என்.ஆர். தனபாலன் பேசியதாவது. சிலம்பம் தற்போது மிகப்பெரிய எழுச்சியுடன் வளர்ச்சி அடைந்து வருகிறது . மாணவர்களுக்குஅரசு மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் சரியாக கிடைக்க நமது சங்கம் முயற்சி செய்ய வேண்டும். மேலும் அனைத்து சிலம்ப சங்க அமைப்புகளையும் ஒருங்கிணைத்து விரைவில் சென்னையில் ஒரு பிரம்மாண்டமான மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டை இச்சங்கம் மூலம் செய்திட வேண்டும் என்று உறுதிபடக் கூறினார். கூட்டத்தில் சிலம்ப ஆராய்ச்சியாளர் அருணாசலம் ஆசான் . திரைப்பட ஸ்டன்ட் இயக்குனர் கோல்டன் கோபால். சங்கத்தின் துணை செயலாளர் எம். ராஜா ஆசான் மற்றும் கிருஷ்ணசாமி ஆசான். குமார் ஆசான். சௌந்தரராஜன் ஆசான் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் விஜயன். அருண் கேசவன். சண்முகம். ஈரோடு கருப்பு . ஸ்ரீதர். முரளி. ராஜா. பாலா. உள்பட பலர் கலந்து கொண்டனர் . முடிவில் சங்கத்தின் பொருளாளர் பி.ராஜவேலு நன்றி கூறினார்.