உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் ( லோக் அதாலத் ) நடைபெற்றது .
13-5-2023 ல் உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதி மன்றம் (லோக் அதா லத்) ல் சமரச தீர்வு முகாமில் 2 விபத்து வழக்கில் தீர்வு ஏற்பட்டு ரூ. 27,50,000/- க்கு பண உத்தரவு வழங்கப்பட்டது. மாவட்ட முன்சிப் நீதிபதி. திரு. சரவண செந்தில்குமார் அவர்கள்தலைமையில் லோக் அதாலத் நடைபெற்றது. இன்று உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தலைமை ஏற்று நடத்தி கொடுத்த மாவட்ட உரிமையியல் நீதிபதி A.சரவன செந்தில்குமார்,பிகாம்,பி.எல் அவர்களின் தலைமையிலும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி அ.ராமநாதன்பி.ஏ,பி.எல்.,குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்ற நீதிபதி p.ரமேஷ் பி.எல்.,உறுப்பினராக வழக்கறிஞர் திரு எஸ்.செல்வன் ஆகியோர்களின் முன்னிலையிலும் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கபட்டவர்கான நஷ்டஈடு கோரும் இரண்டு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ 25,50,000 வழங்க உத்தரவாகியுள்ளது.. செக் மோசடி வழக்குகளில் அபராத தொகையாக ரூ 10,500 செலுத்த உத்தரவாகியுள்ளது அபராத வழக்குகளில் ரூ8,72,800 செலுத்த உத்தரவாகியுள்ளது…அதன்படி லங்கிகான(ஸ்டேட் பேங்க்,இந்தியன் வங்கி,பரோடா வங்கி மற்றும் ஸ்ரீ ராம் பைனான்ஸ் போன்ற வங்கியிலிருந்து வாராக்கடனை வசூல் செய்யும் வழக்குகளில் வசூலான தொகை ரூ 1,13,98,244…இதன் ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழுவின் இளநிலை நிர்வாக உதவியாளர் திரு சு.சசிதர் செய்திருந்தார்.