Others
உதயநிதி ஸ்டாலின், பி. கே. சேகர்பாபு பதவி விலக கோரி பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம்..
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.அமைச்சர் பி. கே. சேகர்பாபு பதவி விலக கோரி தமிழக முழுவதும் பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.திருவள்ளுவர் கிழக்கு மாவட்டம் பா.ஜ.க. சார்பில் பொன்னேரி பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மாநில பா.ஜ.க. செயலாளர் .
டாக்டர். ஆனந்த பிரியா தலைமையில் பொறுப்பாளர்கள் ரவி. நரேஷ் குமார். பரந்தாமன் ஆகியோர் முன்னிலையில் 150 க்கு மேற்பட்ட பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கே. ஆர். வெங்கடேசன் புழல் மண்டல தலைவர் முரளி கிருஷ்ணன் வில்லிவாக்கம் மண்டல தலைவர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.அனைவரையும் பொன்னேரி போலீசார் கைது செய்து பொன்னேரி வட்டார நாடார் ஐக்கிய சங்க திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர் இரவு 9 மணிக்கு அனைவரையும் விடுதலை செய்தனர்.