ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
சென்னையில் 400 செக் போஸ்ட்டுகள்…! 12 நாள் ஊரடங்கில் கட்டுப்பாடுகள்!
400 check posts in Chennai
சென்னை:
12 நாள் ஊரடங்கு காரணமாக சென்னையில் 400 இடங்களில் செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் காரணமாக 12 நாட்கள் முழு ஊரடங்கு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை 100 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒரு பாகத்திற்கு 4 செக்போஸ்ட் என்ற கணக்கில் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் நடமாடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 கிலோமீட்டர் தொலைவுக்கு மேலே யாரும் நடமாட முடியாது.
உரிய காரணங்கள் இன்றி வெளியேறினால் காவல்துறை நடவடிக்கை பாயும். ட்ரோன்கள் மூலமும் மக்கள் நடமாடுவதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.