fbpx
Others

இராணிப்பேட்டை- வாலாஜா ஒன்றியம், வி.சி.மோட்டூர்பள்ளிகள்-சிறப்புசெய்தி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (2022-23) கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள, பள்ளிக் கட்டிடங்களை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  அதனைத் தொடர்ந்து, இராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜா ஒன்றியம், வி.சி.மோட்டூர், நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக்கட்டிடத்தில், மாண்புமிகு. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஆர்.காந்தி  குத்துவிளக்கேற்றி வைத்தார்.அதேபோன்று, நெமிலி ஊராட்சி ஒன்றியம், மேலபுலம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ரூ.30,34,000/-மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடத்தில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு குத்துவிளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய துணைப் பெருந்தலைவர், திரு.ச.தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர், திருமதி.அனிதா நாராயணன், ஒன்றியக் குழு உறுப்பினர், திரு.மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திரு.பிரபாகரன், திரு.இரவி, பள்ளி தலைமை ஆசிரியர், திரு.விநாயகம், ஆசிரியை, திருமதி.ஞானம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர், திரு.பாண்டியன், ஊராட்சி செயலாளர், திரு.பார்த்திபன், விஜயன், ஹரிக்கிருஷ்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!…

Related Articles

Back to top button
Close
Close