fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

ரயில் பயணிகள் கவனத்துக்கு…! கட்டாயம் பின்பற்ற தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்

Special train guidelines

சென்னை:

சிறப்பு ரயில்களில் செல்லும் யணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வேயானது தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் இயக்குகிறது. மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும், கோவையில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காட்பாடிக்கும் செல்கின்றன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: அரசு உத்தரவின்படி ரயிலில் பயணிக்கும் அனைவருக்கும் இ பாஸ் கட்டாயம்.

ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ, மாவட்டத்திற்கோ,  மாநிலத்திற்கோ ரயிலில் செல்ல விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசிடம் ஆன் லைன் வழியே இ பாஸ் பெற்று இருக்க வேண்டும்.

ரயில் புறப்படும் 90 நிமிடங்கள் முன்பு பயணிகள், ரயில் நிலையம் வந்துவிட வேண்டும். பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம் உண்டு. சமூக இடைவெளி கட்டாயம் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close