ரயில் பயணிகள் கவனத்துக்கு…! கட்டாயம் பின்பற்ற தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்
Special train guidelines
சென்னை:
சிறப்பு ரயில்களில் செல்லும் யணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயானது தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் இயக்குகிறது. மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும், கோவையில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காட்பாடிக்கும் செல்கின்றன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: அரசு உத்தரவின்படி ரயிலில் பயணிக்கும் அனைவருக்கும் இ பாஸ் கட்டாயம்.
ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ, மாவட்டத்திற்கோ, மாநிலத்திற்கோ ரயிலில் செல்ல விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசிடம் ஆன் லைன் வழியே இ பாஸ் பெற்று இருக்க வேண்டும்.
ரயில் புறப்படும் 90 நிமிடங்கள் முன்பு பயணிகள், ரயில் நிலையம் வந்துவிட வேண்டும். பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம் உண்டு. சமூக இடைவெளி கட்டாயம் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.