இராணிப்பேட்டை மாவட்ட காவல் சிறப்பு செய்தி
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (22/06/2022)அன்று நடைபெற்ற குற்ற ஆய்வு கூட்டத்தில் கடந்த மே மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் திருமதி. மங்கையர்கரசி கலவை காவல் நிலையம், திரு. மணிமாறன் காவேரிபாக்கம் காவல் நிலையம், திரு.சேதுபதி அரக்கோணம் கிராமிய காவல் நிலையம், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. மதிவாணன் பானாவரம் காவல் நிலையம், தலைமை காவலர்கள் திரு. சங்கர் ஆற்காடு நகர காவல் நிலையம், திருமதி. கெஜலக்ஷ்மி இராணிப்பேட்டை காவல் நிலையம், திருமதி. ஜான்சிராணி அரக்கோணம் நகர காவல் நிலையம், திருமதி. மீனா இராணிப்பேட்டை காவல் நிலையம், முதல் நிலை காவலர்கள் திரு.கபிலன் சிப்காட் காவல் நிலையம், திரு. கமலகண்ணன் நெமிலி காவல்நிலையம், திரு. காதர் அரக்கோணம் நகர காவல் நிலையம், திரு. குமரன் இராணிப்பேட்டை காவல் நிலையம், இரண்டாம் நிலை காவலர் திரு.நாராயணன் காவேரிபாக்கம் காவல் நிலையம் ஆகியோரை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் இ.கா.ப அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்கள்.