fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

ரூபாய் 153 செலுத்தினால் 100 டி வி சேனல் :டிராய் அறிவிப்பு!!

100 டிவி சேனல்களை ரூ.153 க்கு காணலாம் என மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.

இந்த புதிய கட்டண முறை பிப்ரவரி 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு  வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான் டிராய் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவை கட்டணம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது கட்டண்மில்லாத சேனல்களை 153.40 ரூபாய்க்கு கண்டுக் களிக்கலாம் என் தெரிவித்துள்ளது

100 சேனல்களுக்கான புதியக் கட்டணம் ரூ.130 ஆகும். அதனுடன் ஜிஎஸ்டி சேர்த்து மொத்தம் 153 ரூபாய் செலுத்தி விருப்பமான 100 சேனல்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம்.

இந்த அறிவிப்பின்படி வாடிக்கையாளார்கள் 100 சேனல்களை ஜனவரி 31ம் தேதிக்குள் தேர்வு செய்து தெரிவிக்கவேண்டும்.

அதன்பின்னர் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணத்தை செலுத்தவேண்டும்.

இந்த புதிய கட்டண முறை பிப்ரவ்ரி 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு  வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கட்டணச் சலுகையில் ஹெச்.டி. சேனல்கள் இதில் இடம்பெறாது என கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close