Others
இராணிப்பேட்டை போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி 11 / 8 / 22
(11/08/2022) இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப அவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்தியன் இ.கா.ப அவர்கள் தலைமையில் வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நடத்தப்பட்டது. இவ்வுறுதி மொழியில் போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும், போதை பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி நடத்தப்பட்டது.