fbpx
Others

இராணிப்பேட்டை .தீபா சத்தியன் I.P.S பாராட்டு 12 / 8 / 22

(12/08/2022) இராணிப்பேட்டை மாவட்டத்தில், கடந்த ஜூலை மாதம் ஆற்காடு கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை செயின் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி அசின் அலி த/ பெ அப்துல் அஜிம் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 12 சவரன் நகைகளை மீட்டு குற்றவாளியை சிறையில் அடைத்து, இவ் வழக்கில் சிறப்பாக பணியாற்றிய, ஆற்காடு கிராமிய வட்ட காவல் ஆய்வாளர் திரு. காண்டீபன், வாலாஜா காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் , ஆற்காடு கிராமிய காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. வெங்கட்ராமன் ,கலவை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கண்ணன், இராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமை காவலர் திரு. பிரகாஷ், இராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமை காவலர் திரு. உசைன் பாஷா மற்றும் ஆற்காடு கிராமிய காவல் நிலைய முதல்நிலை காவலர் திரு. மணிகண்டன் ஆகியோர்களை பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் .தீபா சத்தியன் இ.கா.ப. அவர்கள் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close