fbpx
Others

இந்து எழுச்சி முன்னணி– சாலையை சீரமைத்து தர ஆணையாளரிடம் மனு..

தேனி இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமையில்
மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ்,மாவட்ட பொருளாளர் செந்தில்குமார்,நகர தலைவர் செல்வபாண்டியன் ஆகியோர்கள் முன்னிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் தேனி அல்லிநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ வீரப்ப அய்யனார் திருக்கோயில் உற்சவமானது வருடம் தோறும் சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இத்திருவிழாவிற்கு உள்ளூர் மட்டுமன்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக் கடனாக காவடிகள்,மற்றும் பால் குடங்கள் சுமந்து சென்று அய்யனாருக்கு காணிக்கை செலுத்துவார்கள் தற்போது இக்கோயிலுக்கு செல்லும் முக்கிய சாலை ஆனது மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது பக்தர்களின் நலன் கருதி பழுதடைந்துள்ள சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close