Others
ஆவடி— செக்போஸ்ட் போக்குவரத்துகுறி தெரியாத காரணத்தினால் 3 மாதங்களாக வாகன ஓட்டிகள் அவதி
ஆவடி – செக்போஸ்ட் போக்குவரத்துகுறி மின்விளக்குகள் புதிதாகப் பொருத்தப்பட்ட காரணத்தினால் பழைய மின்விளக்குகுறி தெரியவில்லை. கண்டுகொள்ளாத அரசு புதிதாகப் பொருத்தப்பட்ட மின்விளக்குறியின் மின் இணைப்பு கொடுக்கப்படாத காரணத்தினால் 3 மாதங்கள் ஆகியும் குறிகள் காட்டப்படவில்லை. பழைய மின்விளக்குகுறி காட்டப்படும் நிலையில் புதிதாக பொருத்தப்பட்டது முன்பக்கத்திலும். எரியும் மின்விளக்குகுறி எதிர்திசையில் பார்க்கும் வாகன ஓட்டிகளுக்கு பின்பக்கத்தில் இருக்கும் நிலையில் புதிய மின்விளக்குகுறி கம்பங்கள் மறைக்கப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையின் மெத்தனப்போக்கு இதற்கு காரணமாக அமைகிறது. புதிதாக பொருத்தப்பட்டதற்கு மின் இணைப்பு கொடுத்து பழைய மின்விளக்குகுறி கம்பங்களை அகற்றக் கோரியும் பொதுமக்கள் தினசரி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்…