அல்லிநகரம் நகராட்சி–பயணியர் நிழற்குடையில்வருவாய்…?
தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இடது புறம் உள்ள பயணியர் நிழற்குடையில் கனரக லாரிகளை நிறுத்தி வைக்கவும் மற்றும் மீன் கடையும் போட்டு வியாபாரம் அமோகமாக நடக்கிறது…. என்றைக்கு இந்த நிழற்குடை மீன் கடைக்கு நகராட்சி வாடகைக்கு விட்டுள்ளது என்று தெரியவில்லை…. மேலும் வலது பக்கத்தில் பயணியர் நிழற்குடை கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சாலையில் மணல், பெரிய அளவிலான ஜல்லிகற்கள், சிறிய அளவிலான ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு பணிகள் நடைபெறாமல் நீண்ட நாளாக ரோட்டிலேயே கிடக்கிறது…… இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது….. இந்த பணிகளை விரைந்து முடிக்கவும், நிழற்குடை அருகில் லாரிகளை நிறுத்தி வைக்காமல் இருக்கவும், மீன்கடைகளை போடவிடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகமும், தேனி மாவட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்???….. இவற்றை உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என இப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்?…………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.