Others
அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி 358 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
செங்குன்றம் கே. பி. சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி 358 பேருக்கு வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் எம். அமுதா தலைமையில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனம் மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் புழல் ஒன்றிய திமுக செயலாளர்பி. சரவணன் பேரூராட்சி தலைவர். தமிழரசி குமார் துணைத் தலைவர். ஆர் . விப்ர நாராயணன் மற்றும் கவுன்சிலர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். பி. எல். சரவணன் பள்ளி வளர்ச்சி குழு நிர்வாகிகள் ஆர் .ஆர். சாந்தகுமார். சேரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி துணை தலைமை ஆசிரியர். முத்துச்செல்வி நன்றி கூறினார்.