Others
அரசு பங்களாவை காலி செய்து சாவியை ஒப்படைத்தார் ராகுல் காந்தி
ராகுல் காந்தி டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து சாவியை ஒப்படைத்தார். டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து சாவியை ஒப்படைத்தார். ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். மக்களவை செயலாளர் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து சாவியை ஒப்படைத்தார்.
- எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து அரசு இல்லத்தை காலிசெய்த ராகுல் காந்தி, ”உண்மையைப் பேசுவதற்காக விலை இது” என்று கூறியுள்ளார்.வயநாடு தொகுதி எம்.பியாக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2005-ம் ஆண்டு முதலே, அதாவது சுமார் 19 ஆண்டுகள் டெல்லி துக்ளக் லேன் பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து, அரசு இல்லத்தை காலிசெய்யுமாறு மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், ஏற்கனவே வீட்டிலிருந்த சில பொருட்களை ஜன்பத் சாலையில் உள்ள தனது தாய் சோனியாகாந்தி இல்லத்துக்குக் கொண்டுசென்றார். இந்த நிலையில், முறைப்படி வீட்டை ராகுல் காந்தி இன்று காலிசெய்தார். வீட்டின் சாவி மக்களவைச் செயலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.