Others
அரசியலை புகுத்தி……. பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை …?
மக்கள் பிரச்னையில் தேவையில்லாமல் அரசியலை புகுத்தி தங்கள் கட்சியை பலப்படுத்த பாஜக நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்று சட்டசபையில் பாஜகவினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் குறித்து தமிழக சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்கள் பிரச்சினையில் பாஜக கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. மத்திய அரசிடம் பேசி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அதுமட்டுமின்றி, மாநில அரசுக்கு வரவேண்டிய நிதிகளை பெறுவதற்கு உறுதுணையாக இருந்து அதை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். தேவையில்லாத அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால், அது நடக்கவே நடக்காது” என்று அவர் தெரிவித்தார்