அரசின் சார்பில் சிலம்ப கலை முதுமணி பட்டம் பெற்ற ஆர் முருககனி ஆசானுக்கு பாராட்டு….!
அரசின் சார்பில் சிலம்ப கலை முதுமணி பட்டம் பெற்ற ஆர் முருககனி ஆசானுக்கு பாராட்டுவிழா .செங்குன்றத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் சிலம்ப செம்மல். ஆர். முருக கனி ஆசான் அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலை பண்பாட்டு துறை இணை இயக்குநர். ஹேமநாதன் பரிந்துரை யில் மாவட்டஆட்சியர். ஆல்பி ஜான் வர்கீஸ்
கலை முதுமணி பட்டம் வழங்கியதை முன்னிட்டு திருவள்ளூர்மாவட்ட சிலம்பம் கமிட்டி சார்பில் செங்குன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றதுவிழாவிற்கு இந்திய சிலம்பர சங்க தொழில்நுட்ப இயக்குனர். எஸ் . துரை தலைமை தாங்கினார் திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி பொருளாளர் எம் .பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் அருள். ஜெகதீசன் முன்னிலை வகித்தனர். அனைவரையும் செங்குன்றம் சி. பா.ஆதித்தனார் சிலம்பக் கலைக்கூடத்தின் முதன்மை பயிற்சியாளர் எஸ் .ரிஸ்வான் பாஷா வரவேற்றார் விழாவில் மாவட்டத்தின் பல்வேறு கிளைகள் சார்பாக நிர்வாகிகள் அலமாதி எம்ஜிஆர் குமரேசன். ஆவடி. செல்வராஜ் ஆசான். சோழவரம் மணி .பெரிய நத்தம் பிரதாபன்.காந்திநகர் வழக்கறிஞர். சண்முகசுந்தர பெருமாள். மற்றும் யூத் கேம் பெட்ரேஷன் ஆப் இந்தியா நிர்வாகிகள் சௌந்தரராஜன் .விஜயன் ஆசான்கள் திரைப்பட நடிகர் தர்ஷன். உள்பட பலர் கலந்து கொண்டனர்.