fbpx
Others

அதிமுக பொதுக்குழுமீண்டும்ஜூலை 11ம்தேதி

பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவு பெற்றது. இதற்கிடையே, பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று வரும் ஜூலை 11ம் தேதி அன்று மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்அறிவித்தார். மேலும், இரட்டை தலைமையை ரத்து செய்து, வலுவான ஒற்றை தலைமையை கொண்டுவர உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம் மண்டபத்தில் சலசலப்புடன் முடிவடைந்தது. (அதிமுக பொதுக்குழு கூட்டம் வீணாகி போகி விட்டதே கட்சியினர் கவலை )

மண்டபத்திற்கு வெளியே தனியாக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு அதில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து போடுவதற்காக மேஜைகள் போடப்பட்டு இருந்தன. இதே போல புதுவை, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, டெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கையெழுத்து போடவும் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

Related Articles

Back to top button
Close
Close