fbpx
Others

அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் : காங்கிரஸ்போராட்டம்….

 ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்பிஐ கடன் வழங்கி உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்: காங்கிரஸ் நாளை நாடு தழுவிய போராட்டம் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை 2 நாளாக முடக்கின. இந்நிலையில் நாடு முழுவதும் நாளை 6ம் தேதி எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி முன்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தநிலையில், பிரதமர் மோடியின் நண்பர் அதானி, முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான புகார்கள் குறித்து எந்த ஒரு விசாரணையும் நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மவுனம் காத்து வருகிறார். இதை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்த உள்ளதாகவும் மக்களுக்கு பதில்களை தயாராக வைத்துக்கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related Articles

Back to top button
Close
Close