fbpx
Others

அண்ணாமலை குற்றச்சாட்டு-கால்வாய்களை கூட தி.மு.க. அரசால் தூர்வார முடியவில்லை.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 28-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபயணத்தை தொடங்கிய அவர் கடந்த 15-ந் தேதி குமரி மாவட்டம் வந்தார். நேற்று காலையில் பத்மநாபபுரம் சட்டசபை தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். சாமியார்மடத்தில் இருந்து காலை 10மத்திய அரசு நிதி ஒதுக்கியும் கால்வாய்களை கூட தி.மு.க. அரசு தூர்வாரவில்லை -அண்ணாமலை குற்றச்சாட்டு மணிக்கு நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை பகல் 12.30 மணிக்கு மணலி சந்திப்பை வந்தடைந்தார். கல்லுவிளை பகுதியில் வந்தபோது அங்குள்ள முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பெண்கள் அண்ணாமலையை சூழ்ந்து மதுகடைகளை மூடுங்கள் என கோரிக்கை வைத்தனர். மேலும் இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர் திறந்த வாகனத்தில் நின்று பேசியபோது கூறியதாவது:- 600 லோடு கனிம வளங்கள் குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் 600 லோடு கனிமவளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இப்படியே போனால் குமரி மாவட்டம் அதன் தன்மையை இழந்துவிடும். இதற்கு பரிசாக கேரள மருத்துவக் கழிவுகளை இங்கும், தென்காசியிலும் கொட்டுகிறார்கள். 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களிலும், 28 டன்னுக்கு அதிகமாகவும் கனிமவளங்களை கொண்டு செல்லக்கூடாது என்று கடந்த மாதம் 23-ந் தேதி அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்தார். ஆனால் சிலரை தூண்டிவிட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு அந்த ஆணை நிறுத்தி வைக்கப்பட்டது.அதேநேரம் கோர்ட்டு பிறப்பித்த ஆணையை எதிர்த்து அமைச்சர் மனோதங்கராஜ் ஏன் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகவில்லை. விவசாயிகள் பிரச்சினை எல்லா இடத்திலும் தண்ணீர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை இருக்கிறது. விவசாயிகளின் எதிரியாக தி.மு.க. உள்ளது. காமராஜர் 12 அணைகள் கட்டினார். ஆனால் கால்வாய்களை கூட தி.மு.க. அரசால் தூர்வார முடியவில்லை. கால்வாய்களை கடைவரம்பு வரை தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்கியும் அவை தூர்வாரப்படவில்லை. சாதி கலாசாரம் தமிழகத்தில் 10 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் சரியில்லை என்று அரசே கூறியுள்ளது. பள்ளிகளில் சாதி கலாசாரம் உள்ளது. நாங்குநேரியில் சாதியால் மாணவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்த தர்ஷிணி என்ற ஏழை மாணவி நீட் தேர்வில் 396 மதிப்பெண்கள் பெற்று விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட்டை வைத்து அரசியல் செய்கிறார். 2024-ம் ஆண்டு தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. சாமானியனுக்கும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்குமான தேர்தல். பொய் பிரசாரம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் மீனவர்களுக்கு வீடு கட்டி தருவதாகவும், மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை அதிகாித்து தருவதாகவும் கூறினார். ஆனால் அதை செய்யவில்லை. தற்போது ராமநாதபுரத்தில் மீனவர் மாநாட்டை மு.க.ஸ்டாலின் நடத்துகிறார். மீனவர்களை பாதுகாப்பவர் மோடி. சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக மீனவர்களுக்காக ஒரு அமைச்சகம் கொண்டு வந்தார். மீனவர்களை மீன் விவசாயி என்று அறிவித்து விவசாயிகளுக்கான திட்டங்களை கொண்டு சேர்த்தார். இவ்வாறு அண்ணாமலை பேசினார். டிராக்டர் ஓட்டினார் பின்னர் தக்கலை அருகே குமாரபுரம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று சொட்டுநீர் பாசம் மூலம் விவசாயம் செய்வதை அண்ணாமலை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்டரை சிறுது தூரம் ஓட்டி சென்றார். மாலை 6 மணிக்கு தக்கலையில் இருந்து வில்லுக்குறி வரை நடைபயணம் மேற்கொண்டார். நடைபயணத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Articles

Back to top button
Close
Close