சென்னையில் சாத்தூர் நாடார்கள் உறவின்முறை வெள்ளி விழா..

சென்னையில் வாழும் சாத்தூர் நாடார்கள் உறவின்முறை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா சென்னை பழைய வண்ணாரப்பேட்டை 7000 பண்ணை நாடார்கள் திருமண மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் குழந்தைகள், இளைய தலைமுறை தம்பதிகள், முதியவர்கள் கலந்து கொண்ட விளையாட்டு மற்றும் தனிநபர் திறன், அறிவுத்திறன் போன்ற போட்டிகள் நடைபெற்றது.மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு, மெட்ரிக், சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.சாத்தூர் உறவின் முறையில் உள்ள பல்துறை வித்தகர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.காலை முதல் மாலை வரை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.சங்கத்தின் நிர்வாக பொறுப்பாளர். கே. என். சேர்மக்கனி, தலைவர். கே. கணேசன், செயலாளர் .எம். காளீஸ்வரன் பொருளாளர்.எம். தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.