வாலாஜா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் சிக்கிய போதைபொருட்கள்…
(22.04.2025) தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . விவேகானந்த சுக்லா, அவர்கள் உத்தரவின் பேரில் ஆற்காடு கிராமிய வட்ட காவல் ஆய்வாளர் .சாலமோன் ராஜா அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் .மகாராஜன் அவர்கள் தலைமையிலான காவல் அதிகாரிகள் வாலாஜா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது பெங்களூர் To சென்னை சாலையில் Hyundai Creata என்ற காரில் 371 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தி சென்ற எதிரிகளான A1.கல்யாண்ராம் (27) த/பெ பவுன்லால், தலக்கட்டுபுரா,பெங்களூர், கர்நாடக மாநிலம், A2.காணாராம் (29) த/பெ முள்ளாராம், கோத்பூர் மாவட்டம், ராஜஸ்தான் ஆகியோர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து ருபாய். 10,79,600/- மதிப்புள்ள குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது