fbpx
Others

வாலாஜா அடுத்த ஒழுகூர்குப்பம்–அக்கினி வசந்தவிழா..

வாலாஜா அடுத்த ஒழுகூர்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோவிலில் அக்கினி வசந்த விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா ஒழுகூர் குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோவிலில் 47 ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா காப்புக் கட்டி கொடியேற்றத்துடன் நேற்று 16.04.25 தொடங்கியது 15 நாட்கள் வரை நடைபெற உள்ள இத்திருவிழாவில் சோளிங்கர் அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகா பாலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏ.பஞ்சாட்சரம் அவர்களால் பாரத சொற்பொழிவும் எரும்பி கிராமத்தைச் சார்ந்த வடிவேல் அவர்களால் கவி வாசித்தலும் தொடங்கியது அதனைத் தொடர்ந்து 17. 04.25 வியாழக்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்கு செட்டிதாங்கள்ஸ்ரீபொன்னியம்மன் தெருக்கூத்து நாடக மன்ற ஆசிரியர்கள்கே.பெருமாள், வி.கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜனா( எ) ஆறுமுகம் கன்னிகாபுரம் எம்.பெருமாள்,என.சாய் சந்தீப் குழுவினரால் நாடகம் தொடங்கியது வருகின்ற 21 ஆம் தேதி காலை 10 மணி அளவில் தபசு நாடகமும், 25 ஆம் தேதி காலை 7:00 மணிக்கு திரௌபதி அம்மனுக்கு பால்குடம் ஊர்வலம் 27ஆம் தேதி மாலை தீமிதி திருவிழாவுடன் படுகளம், 28ஆம் தேதி திங்கட்கிழமை தர்மராஜா பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது இவ்விழாவினை ஊர் நாட்டாமைதாரர்கள், கோவில் நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தி வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close